ஒளிப்பதிவாளரின் இறுதி அஞ்சலி திரையுலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவலம்..!

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்திய திரையுலகில், குறிப்பாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளராக விளங்கியவர் அசோக்குமார். ரஜினியின் ‘ஜானி’, ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அசோக்குமார் காலமானார். ஆனால் எடிட்டர் லெனின் தவிர திரையுலகினரில் பெரும்பாலோனோர், ஏன் அவருடன் இணைந்து பணியாற்றிய பலரும் அவருக்கு கடைசி மரியாதையை செலுத்துவதற்காகவோ அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவோ செல்லவில்லை என்பது தான் சோகத்திலும் சோகம்.. இதுதான் நிதர்சனமான சினிமா உலகம்..