முறிந்ததா த்ரிஷா-ராணா காதல்..?

தெலுங்கு முன்னணி நடிகர் ராணா – த்ரிஷாவின் காதல்.. ஸாரி.. பிரண்ட்ஷிப் நாடறிந்த ரகசியம்.. இருவரும் ஒன்றாக சினிமா நிகழ்ச்சிகளுக்கு வருவது, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் என்ன சுவராஸ்யம் என்றால், திடீரென்று ஜோடியாக பார்ட்டிகளுக்கு வருவார்கள். சில நாட்களிலேயே பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி வரும். திரும்பவும் ஒன்றாக காட்சி தருவார்கள். த்ரிஷாவின் அப்பா மரணம் அடைந்தபோது கூடவே இருந்து எல்லாவற்றையும் செய்தவர் ராணா. சில மாதங்களுக்கு முன்பு கூட ஐதராபாத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் கணவன் மனைவிபோல கைகோர்த்து வந்து ஆச்சர்யப்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது அவர்களுக்கிடையில் பெரும் இடைவெளி… இல்லையில்லை பிளவே ஏற்பட்டதாக தெரிகிறது. காரணம் இருவரும் மாறி மாறி டிவிட்டரில் போட்டுத்தாக்கும் கமெண்ட்டுகள் தான். ஒரு கதைக்கு மூன்று பக்கம் உண்டு என ராணா ட்வீட் பண்ணினால், எந்த கதையையும் நம்பமுடியாது என்கிறார் த்ரிஷா.. யாராவது ஒரு புண்ணியவான் இதில் தலையிட்டு இவர்கள் திருமணத்தை உடனே நடத்தி வைத்தால் நல்லது.