முதல் ஆளாக வந்து பாதிலேயே கிளம்பிய அர்னால்டு..!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து கிளம்பி நேற்று அதிகாலையில் முதல் ஆளாக சென்னை வந்து இறங்கிய அர்னால்ட், விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சி முடியும் முன்பே தனது உரையை நிகழ்த்திவிட்டு பாதியிலேயே கிளம்பியது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்காகவே இருந்தது..

ஆனால் அர்னால்ட் கிளம்பினாலும், நிகழ்ச்சி முடியும் வரை இருந்து சிறப்பித்தார் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். விழாவில் பேசிய ரஜினி “ஐ’ படம் ‘சீயான்’ விக்ரமை, ‘ஐ’ விக்ரமாக மாற்றியுள்ளது. படத்திற்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னை வருத்தி நடிப்பவர். இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம். தமிழ் சினிமாவிலும் சரி, ஹாலிவுட்டிலும் சரி விக்ரம் போல ஒரு நடிகர் இல்லை. சிறப்பாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கும் விக்ரமுக்கு நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாராட்டினார்..