அபிராமியை டென்ஷன் ஆக்கிய ஆட்டோ ட்ரைவர்..!

பத்து வருஷத்துக்கு முன் பீக்கில் இருந்தவர்தான் நடிகை அபிராமி.. ‘விருமாண்டி’யில் கமலுடன் ரொமான்ஸ் பண்ணியவர். இவர் சென்னைக்கு வருவார்.. அதுவும் ஆட்டோவில் பயணிப்பார் என யார்தான் எதிர்பர்த்திருப்பார்கள்.. சமீபத்தில் சென்னை வந்த அபிராமியை டென்ஷனாக்கி விட்டார் ஆட்டோ ட்ரைவர் ஒருவர். காரணம் ஆட்டோவில் பயணித்த அபிராமியிடம் மீட்டர் போடாமல் பணம் அதிகமாக கேட்டு தகராறு செய்ததுதான்..

இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் அபிராமி. “அப்பா.. ஆட்டோ ட்ரைவர்களே.. நீங்கள் மீட்டர் போடாமல் ஓட்டி எங்களிடம் அதிகமாக காசு கேட்டு வாதம் செய்தால் ஒரு ரூபாய் கூட அதிகம் தரமாட்டோம்.. ஆனால் முறைப்படி மீட்டர் போட்டு ஓட்டினால் நீங்கள் கேட்காமலேயே நாங்களே அதிகம் தருவோம்.. இனியாவது புரிந்துகொள்ளுங்கள்” என வேதனைப்பட்டுள்ளார் அபிராமி..