சீட்டாட்டத்தில் ஜெயித்த காசில் கார் வாங்கினாரா ராய்லட்சுமி..?

சுந்தர்.சி இயக்கத்தில் படு த்ரில்லராக உருவாகியுள்ளது ‘அரண்மனை’ படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாடாமல் பத்திரிகையாளர்கள் மத்தியில் எளிதாக நடத்தினார் இயக்குனர் சுந்தர்.சி. இந்தப்படத்தில் சுந்தர்.சி, வினய் கதாநாயகர்களாக நடிக்க ஹன்சிகா, ராய்லட்சுமி, ஆண்ட்ரியா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த விழாவில் பேசிய மனோபாலா, “ஷூட்டிங் ஸ்பாட்ல ஓய்வு நேரங்கள்ல சீட்டு விளையாடிட்டு இருப்போம். அப்படி ஜெயிச்ச காசுலலேயே நம்ம ராய்லட்சுமி ஒரு கார் வாங்கிட்டார்னா பாத்துக்குங்களேன்.. அனேகமா அடுத்த படத்துல வீடு வாங்கிருவார்னு நினைக்கிறேன்” என ராய்லட்சுமியை கலாய்த்தார்..

சந்தானம், சாமிநாதன், கோவை சரளா என பலமான காமெடி காம்பினேஷன் ஒருபக்கம் இருந்தாலும் ‘சந்திரமுகி’, ‘காஞ்சனா’, ‘அருந்ததி’ வரிசையில் இன்னொரு மிரட்டலான படமாக இந்த ‘அரண்மனை’ இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. செப்டம்பர்-19ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.