‘ஜிகர்தண்டா’ தாதா இப்போ அதிரடி போலீஸான கதை தெரியுமா..?

பாபி சிம்ஹா.. கடந்த ஒரு மாதமாக இந்த பெயரை உச்சரிக்காத தமிழ் ரசிகர்கள் இல்லை என்று சொல்லலாம்.. ‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேதுவாக தாதா வேடத்தில் கலக்கியவர் இப்போது அதிரடியாக போலீஸ் அதிகாரியாக புரமோஷன் ஆகியிருக்கிறார் தெரியுமா..?

டைரக்டர் பத்ரி இயக்கியுள்ள ‘ஆடாம ஜெயிச்சோமாடா’ படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சிம்ஹா. நகைச்சுவை நடிகரான கருணாகரன் தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் வசனம் மட்டும் எழுதியுள்ளார் நடிகர் மிர்ச்சி சிவா.

கதாநாயகிகளாக விஜயலட்சுமி, ஹர்ஷிதா நடிக்க, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், சேத்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை நகைச்சுவையாக எடுத்துள்ளார் இயக்குனர் பத்ரி. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.