“நடிகர் சங்கத்தில் வேறு யாரும் நுழைய அனுமதிக்கமாட்டோம்” – பிறந்த நாளில் விஷால் அதிரடி…!

இன்று விஷாலுக்கு 37வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திருந்தார் விஷால். அப்போது பத்திரிகையாளர்களின் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் விஷால்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “நடிகர் சங்கத்தில் வேறு யாரும் நுழைந்து கட்டடம் கட்டிக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். அதைத்தான் பொதுக்குழுவில் கூட நான் சொன்னேன்.. கட்டடம் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்து அட்வான்ஸ் பணம் வாங்கினால் என்ன..? அதை நாங்கள் திருப்பித்துந்து விடுகிறோம்..

அட்வான்ஸ் வாங்கியதாலும் அக்ரிமென்ட் போட்டதாலும் அவர்களுக்கே கொடுத்தாக வேண்டுமா என்ன.? அப்படி ஒன்றும் சட்டமில்லையே.. நான், ஆர்யா, ஜீவா, கார்த்தி உள்ளிட்டவர்கள் இலவசமாக நடித்து தர தயாராக இருக்கிறோம். அதில் வரும் பணத்தை வைத்து நடிகர்சங்கத்திற்கென புதிய கட்டடம் கட்டவேண்டும். இதுதான் என் போன்றவர்களின் விருப்பம்.. இதற்காக மூத்தவர்களை எதிர்க்கிறோம் என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை” என்றார் விஷால்.