ஆவணி-30ல் சென்னையில் அர்னால்டு ஆஜர்..!

ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள ‘ஐ’ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். வரும் செப்டம்பர்-15ஆம் தேதி (ஆவணி-30) இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் ரவிச்சந்திரன்.

இந்த விழாவிற்காக ஜாக்கிசானையும் அர்னால்டையும் சென்னை அழைத்துவர விரும்பிய ரவிச்சந்திரன், தனது சகோதரர் ரமேஷ்பாபுவை நேரடியாக அனுப்பி அர்னால்டு, ஜாக்கிசான் இவருக்கும் அழைப்பிதழ் வைத்திருக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் அர்னால்டை சந்தித்து ‘ஐ’ படத்தின் சில காட்சிகளை போட்டு காட்டியிருக்கிறார் ரமேஷ்பாபு. அதில் விக்ரமின் உருவமாற்றத்தையும், அவர் கேரக்டர்களுக்காக உடல் எடையை கூட்டி குறைத்ததையும் பார்த்த அர்னால்டு ஒரு பாடிபில்டராக தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியதோடு விழாவுக்கு வரவும் சம்மதித்து விட்டாராம்.